'குற்றவாளிகள் ஜாக்கிரதை': திருப்பூரில் 50-கேமராவுடன் உற்றுநோக்கும் 'மூன்றாவது கண்' எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா..!

பெருகி வரும் குற்ற சம்பவங்களால் காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: பெருகி வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நடைபெற்றது.



பெருகி வரும் குற்ற சம்பவங்களால் காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை துரிதமாக கண்டுபிடிப்பதற்காக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.



இதனை திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர் ரவி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு உதவி புரிந்த தொழிலதிபர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் கே.வி.ஆர். நகர் சரக உதவி ஆணையர் வரதராஜன், திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி ஆணையர் செல்வம் தங்கம், திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா உள்ளிட்ட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...