கோவையில் பிறந்த சிசுவுடன் இறந்து கிடந்த பெண் காட்டு யானை - கருச்சிதைவால் உயிரிழப்பா? வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் ஆய்வு..!

உயிரிழந்த பெண் யானை மற்றும் சிசுவிற்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.



கோவை: கோவை வனப்பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் உடல்நலக் குறைவாலும், இயற்கைக்கு முரணான முறையிலும் உயிர் இழந்து வருகிறது.

கடந்த 100-நாட்களில் சுமார் 14-யானைகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கோவை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மூதூர் பெத்திகுட்டை, இரட்டை கண் பாலம் அருகே வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வன எல்லையில் சுமார் 30 மீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் இளம் பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் சிசுவுடன் இறந்து கிடந்துள்ளது.

இதைக்கண்ட வனத்துறை ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர். உயிரிழந்த பெண் யானை மற்றும் சிசுவிற்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அதன்பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும். தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழந்து வந்த நிலையில், சிசுவுடன் பெண்யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...