கோவை மாவட்டம் ஆண்டக்காபாளையம் பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கும் நியாய விலை கடையை திறக்க வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
கோவை: கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு ஆண்டக்காபாளையம் பகுதியில் நியாய விலைக்கடை பல மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக அதை திறக்க வேண்டியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், அன்னூர் வட்டம் வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டக்காபாளையம் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நியாய விலைக்கடை பழுதடைந்ததால், அது முற்றிலும் இடிக்கப்பட்டு புதிதாக நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளது
ஆனால், புதிதாக கட்டப்பட்ட அந்த நியாயவிலைக்கடை பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், அந்த கடையை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், அன்னூர் வட்டம் வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டக்காபாளையம் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நியாய விலைக்கடை பழுதடைந்ததால், அது முற்றிலும் இடிக்கப்பட்டு புதிதாக நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளது
ஆனால், புதிதாக கட்டப்பட்ட அந்த நியாயவிலைக்கடை பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், அந்த கடையை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.