கோவையில் 10 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவியர் அனுபவித்த சிரமத்துக்கு தீர்வு: கழிப்பறைக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த 22 வது வார்டு கவுன்சிலர்!

கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, அந்த வார்டுக்குட்பட்ட அரசு பள்ளியில், தனது சொந்த நிதியிலிருந்து மாணவியர் கழிப்பறைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் அருகே அமைந்துள்ளது மௌனசாமி நகர். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில், பள்ளி மாணவியர் பயன்படுத்தும் வகையில் 2012-13 ல் கழிவறை கட்டப்பட்டது.

கழிபறைக்கு மேற்கூரை அமைக்கபடாத காரணத்தால், அந்த கழிப்பறையை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், மாணவியர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.

அருகில் பல கட்டிடங்கள் கட்டப்பட்ட காரணத்தால், தங்களின் இயற்கை உபாதையை கழிக்க மிகுந்த சிரமப்பட வேண்டிய அவல நிலையில் மாணவியர் தவித்து வந்தனர்.

இப்பிரச்சினை குறித்து சமீபத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் தெரிவித்தார்.



பத்தாண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தலைமை ஆசிரியர் அவர்களிடம் உறுதி அளித்ததுடன், உடனடியாக கழிப்பிடம் கட்டும் பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்து மேற்கூரை அமைக்கும் பணியை கவுன்சிலர் பாபு துவக்கி வைத்தார்.



மாணவியர் கழிப்பறை கட்டடத்தின் மேற்கூரை அமைக்கபட்டதோடு, பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ணம் பூசப்பட்டு தற்பொழுது கழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டி பகுதி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.



கவுன்சிலர் கோவை பாபுவின் இந்த நடவடிக்கை பள்ளி மாணவியர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...