கோவையில் 10 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவியர் அனுபவித்த சிரமத்துக்கு தீர்வு: கழிப்பறைக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த 22 வது வார்டு கவுன்சிலர்!

கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, அந்த வார்டுக்குட்பட்ட அரசு பள்ளியில், தனது சொந்த நிதியிலிருந்து மாணவியர் கழிப்பறைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் அருகே அமைந்துள்ளது மௌனசாமி நகர். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில், பள்ளி மாணவியர் பயன்படுத்தும் வகையில் 2012-13 ல் கழிவறை கட்டப்பட்டது.

கழிபறைக்கு மேற்கூரை அமைக்கபடாத காரணத்தால், அந்த கழிப்பறையை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், மாணவியர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.

அருகில் பல கட்டிடங்கள் கட்டப்பட்ட காரணத்தால், தங்களின் இயற்கை உபாதையை கழிக்க மிகுந்த சிரமப்பட வேண்டிய அவல நிலையில் மாணவியர் தவித்து வந்தனர்.

இப்பிரச்சினை குறித்து சமீபத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் தெரிவித்தார்.



பத்தாண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தலைமை ஆசிரியர் அவர்களிடம் உறுதி அளித்ததுடன், உடனடியாக கழிப்பிடம் கட்டும் பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்து மேற்கூரை அமைக்கும் பணியை கவுன்சிலர் பாபு துவக்கி வைத்தார்.



மாணவியர் கழிப்பறை கட்டடத்தின் மேற்கூரை அமைக்கபட்டதோடு, பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ணம் பூசப்பட்டு தற்பொழுது கழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டி பகுதி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.



கவுன்சிலர் கோவை பாபுவின் இந்த நடவடிக்கை பள்ளி மாணவியர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...