பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்திய காரை கண்ணாடியை உடைத்து, ரூ.3.17 லட்சம் பணத்தை மர்ம நபர் எடுத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கோவை: கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3.17 லட்சம் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரசாமி. இவர் இன்று வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததுள்ளார். அவர் வங்கியில் இருந்து பணத்துடன் வந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
அப்போது, ஈஸ்வரசாமி பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் உணவக கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி விட்டு, உணவகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.3.17 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கார் நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.