கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி விடுதி அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி) மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி விடுதி அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாணவ - மாணவியர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி (22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவராக நான்காம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நந்தினி, இன்று காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்திக் கொண்டு மணிக்கட்டு நரம்புகளை அறுத்த பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வந்தடைய உள்ளனர்.
அவர்கள் வந்த பிறகு, மாணவியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" என்றனர்.
தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்ற சூழலில், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி (22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவராக நான்காம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நந்தினி, இன்று காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்திக் கொண்டு மணிக்கட்டு நரம்புகளை அறுத்த பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வந்தடைய உள்ளனர்.
அவர்கள் வந்த பிறகு, மாணவியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" என்றனர்.
தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்ற சூழலில், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.