கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவர் கைது.
கோவை: கோவை வடவள்ளியில் உள்ள தக்க்ஷா ஷான்ஸ்ராய் (Daksha Sanshray) என்ற தனியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீஸ் - சுகன்யா. இவர்களது மகன் லக்ஷன் (11) நேற்று அப்பார்ட்மெண்ட் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுவனின் தாயார் சுகன்யா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட தோட்டக்காரர் மற்றும் எலட்ரிசியன் மீது வடவள்ளி போலீசார் 304(A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுவனின் தாயார் சுகன்யா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட தோட்டக்காரர் மற்றும் எலட்ரிசியன் மீது வடவள்ளி போலீசார் 304(A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.