மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக் கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி உள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் பூங்காவில் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 78-வது வார்டுக்குட்பட்ட IDUP-காலனி சமத்துவக்கூடம் கடந்த6-வருடமாக பராமரிப்பின்றி சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் சிவசக்தியிடம் சமுதாயக்கூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று அப்பகுதிக்குகோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக்கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதியில் கடந்த ஆட்சியில்பராமரிப்பின்றி இருந்த சிறுவர் பூங்காக்களையும் தூய்மை பணி மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகளும் சென்றனர்.

கோவை மாநகராட்சி 78-வது வார்டுக்குட்பட்ட IDUP-காலனி சமத்துவக்கூடம் கடந்த6-வருடமாக பராமரிப்பின்றி சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் சிவசக்தியிடம் சமுதாயக்கூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று அப்பகுதிக்குகோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக்கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் கடந்த ஆட்சியில்பராமரிப்பின்றி இருந்த சிறுவர் பூங்காக்களையும் தூய்மை பணி மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகளும் சென்றனர்.