கோவையில் மாடு அறுவை மனைகளில் 'கட்டணக்கொள்ளை'.. இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை..!

மாடு அறுவை நிலையத்தில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிக்கும் ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் கோவை மாநகர் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் அதன் தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில், கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



அதில், கோவை சத்தி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட மாடு அறுவை நிலையத்தில், மாடு அறுவை கட்டணமாக மாடு ஒன்றுக்கு ரூ.10 என மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த காலங்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள மாடு அறுவை கட்டணமாக ரூ.10-க்கு பதிலாக சிறிய காளை ஒன்றுக்கு ரூ.70-மற்றும் பெரிய காளை ஒன்றுக்கு ரூ.250/-வசூல் செய்து அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் பெரிய அளவு இழப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 24.03.2022 அன்று நடைபெற்ற ஏலத்தில் அரசு நிர்ணயம் செய்த தொகையான (17,50,000) பதினேழு லட்சத்திற்கு மேல் மிக அதிகமான தொகையான 1,01,00,000/-ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மேற்படி மாடு அறுவை நிலையத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அரசு நிர்ணயம் செய்த ஏல தொகையை விட 6-மடங்கு அதிகமான தொகைக்கு எடுத்து வெற்றி பெற்றுள்ளார். நான் மிக அதிக தொகைக்கு ஏலத்தை எடுத்துள்ளதால் அரசு நிர்ணயம் செய்துள்ள மாடு அறுவை கட்டணமான ரூ .10-க்கு பதிலாக சிறய காளைகளுக்கு 150/-பெரிய காளைகளுக்கு ரூ.500/-கட்டணமாக எங்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்து எங்களிடம் இருந்து கட்டணக்கொள்ளை அடித்து வருகிறார்.

மேற்படி அதிகமான கட்டணத் தொகையை நாங்கள் கட்ட மறுத்த போதுமாடு அறுவை நிலையத்தை எங்களது, மாடுகளை அறுக்க விடாமல்பூட்டி வைத்து விட்டு எங்களை மிரட்டி கட்டாய வசூல் செய்து வருகிறார். இது போக நாங்கள் மாடு அறுவை நிலையத்தில் கட்டணம் கட்டி மாடுகளை அறுத்து சிறிய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்த பிறகு அந்த சிறிய வியாபாரிகளையும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்.

இதனால் நாங்கள் மிகுந்த பெருத்த நஷ்டத்துக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாகி மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். எனவே மாடு அறுவைக்காக அதிக கட்டணம் வசூல் செய்து வரும் ஒப்பந்ததாரர் அஸ்கர் அலிமீது சட்டப்படிநடவடிக்கை எடுத்து, அவரதுஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து மேற்படி மாடு அறுவை நிலையத்தினை அரசாங்கமே எடுத்து நடத்திநியாயமான அறுவை கட்டணம் வசூல் செய்து எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...