கோவையில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் பலி - தனியார் அபார்ட்மென்ட் பூங்காவில் விளையாடிய போது விபரீதம்.

கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த  11 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் விசரானை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் அப்பார்மென்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவைவடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது தக்க்ஷா ஷான்ஷ்ராய் ,(Daksha Sanshray) என்ற குடியிருப்பு வளாகம். அங்கு ஃபேஸ் 2 வில், பிரதீஷ், அவர் மனைவி சுகன்யா மற்றும் அவர்களது 11 வயது மகன் லட்ஷன், வசித்து வந்தனர். தனியார் மருத்துவமனையில் சிறுவனின் தாயார்செவிலியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், நேற்றுஇரவு அபார்ட்மென்ட்டில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு கீழே கிடந்த மின்சார ஒயரை தெரியாமல் மிதித்ததில், சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 



இதையடுத்து, சிறுவனை அங்கிருந்தவர் மீட்டு, முதல் உதவிசிகிச்சை செய்ததாக தெரிகிறது. இருப்பினும், சிறுவன் மயக்க நிலையிலேயே தொடர்ந்து இருந்ததால், அவரை அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தகவலறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து,சிறுவனின் உடலைபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அபார்ட்மென்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், பூங்காவில் கீழே கிடந்த ஓயரில் வந்த மின்சாரம் தாக்கி, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...