வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: கிராம சபை கூட்டத்தில் கோவை ஆட்சியர் அறிவிப்பு

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு, கோவையில் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டியில், மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்பார்வையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


கோவை: நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதைத் அடுத்து, கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.



தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு, கோவையில் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்பார்வையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்பார்வையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது எனவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவும் இதை குறைக்கும் வகையில் கீரைகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளதாகவும் அதை தடுப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் முறையான நீர் மேலாண்மை, தூய்மையான கிராமம், பாலின சமத்துவ அடிப்படையில் தரமான கிராம ஊராட்சி, மாற்றுத்திறனாளி நலன் உள்ளிட்ட பல்வேறு நலன்கள் குறித்து அதிகாரிகள், கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர்கள் ஆகியோர் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.



தொடர்ந்து, இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பட்டா வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு ஒரு கிராமத்தில் என்ன தேவை இருக்கின்றது என்பது குறித்த கருத்துக்களை இந்தக் கூட்டத்தில் விவாதித்தோம் என்றார். அதேபோல, பஞ்சாயத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு உரிமையுடன் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இதைத்தொடர்ந்து ஒரே குடும்பத்தில் தாய் தந்தைக்கு கீழ் 4 வாரிசுகள் தனித்தனி குடும்பமாக வாழும் பட்சத்தில், இதில் வீடு இல்லாத வாரிசுகளுக்கு வீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருவாய் சூழல் கருதி இலவச வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான சர்வே வருவாய்த்துறை முன்னெடுக்கும் என தெரிவித்தார். இலவச வீடு தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, துணைத் தலைவர் ராஜன் மற்றும் திட்ட இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...