'பச்ச புள்ள...சாமி பார்த்து போங்க.!' - கோவையில் யானை கூட்டத்தை பார்த்து கிராம மக்கள் பேசும் வைரல் வீடியோ..!

கோவையில் தண்ணீருக்காக காட்டை விட்டு, விவசாய நிலத்திற்குள் வந்த யானை கூட்டம் மின் வேலியை கடக்க சிரமப்பட்டு வந்ததை பார்த்த கிராம மக்கள், எப்படியாவது அவை பத்திரமாக சென்று விட வேண்டும் என்று அவற்றை வழிநடத்துவது போல பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோடை காலம் என்பதால் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காட்டை விட்டு தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது என்பது கோவை மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

பொதுவாக, குடியிருப்பு அல்லது வனத்தை ஒட்டியுள்ள சாலையில் யானை கூட்டம் கடப்பதை கண்டாலே, அவற்றை அச்சுறுத்துவது, மேள தாளங்கள் அடிப்பது, பட்டாசுகள் வெடிப்பது, கற்களை கொண்டு எரிவது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட கூடாது என்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சிலரின் அறியாமையாலும், மூர்க்கத்தனமான நடவடிக்கைகளாலும் வன உயிர்கள் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.



இந்த நிலையில், கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் தேவராயபுரம் பகுதியில் குட்டியுடன் வந்த யானைக் கூட்டம் ஒன்று மின் வேலியை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஐயோ பச்ச புள்ள...சாமி பார்த்து போங்க...சாமி....அவ்வளவு தான் பத்திரமா புள்ளைய கூட்டிட்டு போயிருங்க சாமி என்று கொங்கு வட்டார வழக்கில், அந்த யானை கூட்டம் பத்திரமாக செல்வதை உறுதி செய்த அப்பகுதி மக்களின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாம் பேசுவது அந்த யானை கூட்டத்திற்கு ஒன்றும் புரிய போவது இல்லை என்றாலும் கூட, மனிதர்கள் என்ன மிருகம் என்ன உயிர் உயிர் தானே என்று அவற்றின் பாதுகாப்பாக எப்படியாவது கடந்து காட்டுக்குள் சென்று விட வேண்டும் என்று கள்ளம் கபடம் இல்லாமல், பரிதவித்த அப்பகுதி மக்களின் நல் உள்ளம், மனிதாபிமானமும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றே. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...