இனி, கோவை மருதமலை முருகன் கோயில் தினமும் ஐந்து வகை பிரசாதம் வழங்கப்படும்..! பக்தர்கள் வரவேற்பு

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி, சென்னை வடபழநி ஆண்டவர், பழநி தண்டாயுதபாணி சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, பண்ணாரி மாரியம்மன் ஆகிய 10 கோவில்களில், பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு காணொளி வாயிலாக பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 10 பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்களுக்கு தினமும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம், சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் துவக்கி வைத்து பேசினார், அப்போது, "சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண்பொங்கல், முறுக்கு, சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்படும். தினமும் 10 ஆயிரம் பேரும், திருவிழா காலங்களில் 25 ஆயிரம் பேர் வரையும் பயன் அடைவர்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பிரசாதம் தயாரிக்க போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அனைத்து பிரசாதங்களும் தரமாக தயார் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கோவை மருதமலை கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கோவை மாவட்ட இணை கமிஷனர் செந்தில் வேலவன், அறநிலையத்துறை துணை கமிஷனர் (பொ) விமலா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து, அறநிலையத்துறை துணை கமிஷனர் (பொ) விமலா கூறுகையில், "மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் மற்ற நாட்களை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூடுதலாக பிரசாதம் வழங்கப்படும்," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...