கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் வாகனத்தில் அதிரடி ரெய்டு..! ரூ.28.35-லட்சம் பறிமுதல்..!

பிடிபட்ட பேருந்துகளை விடுவிக்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்காகவும், கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் உமா சக்தி இந்த லஞ்ச தொகையை பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.



கோவை: கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து லஞ்சமாகப் பெற்ற ரூ.28.35 லட்சம் ரூபாயை கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் உமா சக்தி வாகனத்திலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறை இணை ஆணையர் உமாசக்தி, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத 28.35 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொடர் விடுமுறை தினங்கள் காரணமாக, கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நடத்திய ஆய்வில், கோவை சரகத்தில் 2 பேருந்துகளை பறிமுதல் செய்து கோவை மத்திய வட்டார போக்குவரத்து, இணை ஆணையர் உமாசக்தி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில், பிடிபட்ட பேருந்துகளை விடுவிக்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்காகவும், உமா சக்தி இந்த லஞ்ச தொகையை பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்த திடீர் சோதனை நடத்த பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...