கோவையில் ஓய்வூதிய பணத்தை தராத தந்தையை வெட்டிக் கொலை - மகன் தலைமறைவு….!

கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணத்தை தராததால், தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை ராமநாதபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணத்தை தராததால், தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவர், பி.ஆர்.எஸ் வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சுரேஷ், பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். மேலும், சுரேஷுக்குதிருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார்.



இந்நிலையில் கருப்பசாமி கடந்த சில மாதங்களாகவிமலா என்ற பெண்ணுடன்சேர்ந்து வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கருப்பசாமிக்கு அண்மையில் வந்த ஓய்வூதிய பணத்தை மொத்தமாக விமலாவிடம் கொடுத்துள்ளார். இதனால், கருப்பசாமி மற்றும் சுரேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு கருப்பசாமி டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, விமலா வீட்டு வாசலில் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த சுரேஷ் கருப்பசாமியை அருகே உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று ஓய்வூதிய பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், சுரேஷ், கருப்பசாமியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தலைமறைவானார்.



இதில், ரத்த வெள்ளத்தில் இருந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...