கோவை ஆர்.எஸ் புரம் சண்முகம் சாலையில் உள்ள வீட்டில், கதவு ஏதும் உடைக்கப்படாமல், நகை மாயமான சம்பவம் குறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ் புரம் சண்முகம் சாலையை சேர்ந்தவர் கமலாதேவி (62). இவர் ஐ.டி வேலை பார்த்து வரும் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு பொருட்கள் வாங்க அவர் வணிக வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 19 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
ஆனால், வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்காமல், நகைகள் எப்படி மாயமானது என்று புரியாத கமலா தேவி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நகைகள் மாயமான வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
நகைகள் மாயமானது குறித்து வீட்டிலிருந்த நபர்களிடமும் விசாரித்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு பொருட்கள் வாங்க அவர் வணிக வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 19 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
ஆனால், வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்காமல், நகைகள் எப்படி மாயமானது என்று புரியாத கமலா தேவி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நகைகள் மாயமான வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
நகைகள் மாயமானது குறித்து வீட்டிலிருந்த நபர்களிடமும் விசாரித்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.