கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் ஐ.டி ஊழியர் வீட்டிலிருந்த 19 சவரன் நகை மாயம்…!

கோவை ஆர்.எஸ் புரம் சண்முகம் சாலையில் உள்ள வீட்டில், கதவு ஏதும் உடைக்கப்படாமல், நகை மாயமான சம்பவம் குறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ் புரம் சண்முகம் சாலையை சேர்ந்தவர் கமலாதேவி (62). இவர் ஐ.டி வேலை பார்த்து வரும் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு பொருட்கள் வாங்க அவர் வணிக வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 19 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

ஆனால், வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்காமல், நகைகள் எப்படி மாயமானது என்று புரியாத கமலா தேவி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நகைகள் மாயமான வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

நகைகள் மாயமானது குறித்து வீட்டிலிருந்த நபர்களிடமும் விசாரித்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...