தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நாளை முதல் கோடைக்‌கால நீச்சல்‌ பயிற்சி முகாம்‌ ஆரம்பம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இந்த ஆண்டு கோடைக்கால நீச்சல்‌ பயிற்சி நாளை ஏப்ரல் 23 ஆம்‌ தேதி முதல் தொடங்க உள்ளது. இப்பயிற்சியினை, நாளை காலை பல்கலைக்கழக துணைவேந்தர்‌, பேராசிரியர்‌ வெ. கீதாலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக, மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு, கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ மாணவிகள்‌ அனைவருக்கும்‌ நீச்சல்‌ பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடத்தபட உள்ளது.

அதன்படி, ஏப்ரல்‌ 23 முதல்‌ ஜூன்‌ 21 ஆம்‌ தேதி வரை தினமும்‌ காலை 7 மணி முதல்‌ பிற்பகல்‌ 12.30 மணி வரை மாணவர்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கும்‌, பிற்பகல்‌ 3 மணி முதல்‌ மாலை 5 மணி வரை மாணவியர்களுக்கும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட உள்ளது.

ரூபாய். 3,068 பயிற்சி தொகையாக செலுத்தி, ஐந்து வயதுக்கு மேல்‌ உள்ள அனைவரும்‌ பங்கேற்று பயிற்சி பெறலாம்‌ என்றும் எந்த பயிற்சியில்‌ பங்கு பெற விருப்பமுள்ளவர்கள்‌ பல்கலைக்கழக உடற்கல்வி துறையில்‌ தங்கள்‌ பெயர்களை பதிவு செய்து பயன்‌ பெறலாம்‌, என்று தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்‌ நல முதன்மையர்‌ முனைவர்‌. தி. ரகுசந்தர்‌, செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்‌.

மேலும்‌ , தகவல்‌ அறிய 9486775495/0422 6611279 என்ற எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...