இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையை அடுத்து, விமான நிலைய வரவேற்பு முகப்பில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.
கோவை: இன்று மாலை கோவை விமான நிலையத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையை அடுத்து, விமான நிலைய வரவேற்பு முகப்பில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.
கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் முகப்பு அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று ஒரு மர்ம பெட்டி நீண்ட நேரமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் அதில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா..? என சோதனையிட்டனர்.

இதையடுத்து, அந்த பெட்டியின் உரிமையாளர் யாராவது வருவார்களா? என பெட்டியை சுற்றி பாதுகாப்பு அமைத்து காத்திருந்தனர்.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெட்டி விமான நிலைய அலுவலகத்திற்கு சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
முக்கிய அரசியல் தலைவர்கள் வரும் நேரத்தில், விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டியால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் முகப்பு அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று ஒரு மர்ம பெட்டி நீண்ட நேரமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் அதில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா..? என சோதனையிட்டனர்.
இதையடுத்து, அந்த பெட்டியின் உரிமையாளர் யாராவது வருவார்களா? என பெட்டியை சுற்றி பாதுகாப்பு அமைத்து காத்திருந்தனர்.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெட்டி விமான நிலைய அலுவலகத்திற்கு சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
முக்கிய அரசியல் தலைவர்கள் வரும் நேரத்தில், விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டியால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.