மருதமலை வழிப்பாதையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நாளில் சுமார் 2.5-டன் பிளாஸ்டிக் கழிவுகளை மாணவ - மாணவிகள் தன்னார்வலர்கள் என மொத்தம் 150-பேர் இணைந்து அகற்றியுள்ளனர்.
கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கோவை வனக் கோட்டம், போலுவம்பட்டி வனச்சரகம் மற்றும் மருதமலை செல்லும் வழிப்பாதை, மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி என்.எஸ்.எஸ் மற்றும் நேச்சர் கிளப் மாணவ - மாணவிகள் தன்னார்வலர்கள் என மொத்தம் 150-பேர் இணைந்து, காலை முதல் பல்வேறு குழுக்களாக ஒரே நாளில் சுமார் 2.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர்.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட இடத்தில் மரக் கன்றுகளையும் நடவு செய்துள்ளனர்.
கோவை வனக் கோட்டம், போலுவம்பட்டி வனச்சரகம் மற்றும் மருதமலை செல்லும் வழிப்பாதை, மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி என்.எஸ்.எஸ் மற்றும் நேச்சர் கிளப் மாணவ - மாணவிகள் தன்னார்வலர்கள் என மொத்தம் 150-பேர் இணைந்து, காலை முதல் பல்வேறு குழுக்களாக ஒரே நாளில் சுமார் 2.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர்.
மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட இடத்தில் மரக் கன்றுகளையும் நடவு செய்துள்ளனர்.