கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி மேயர் ஆய்வு - திடக்கழிவு மேலாண்மை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவு…!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் உரங்களாக மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் இன்று காலை கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மண்டல வாரியாக குப்பை தரம் பிரிக்கும் மையங்களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருந்தாலும் இப்போது வரை வெள்ளலூர் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் இன்று காலை கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு தரம் பிரிக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் உரங்களாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளையும் மேயர்கள் கல்பனா ஆய்வு மேற்கொண்டார்.



இதைத் தொடர்ந்து உலக புவி தினத்தை முன்னிட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் 16 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், தினமும் இந்த பணிகள் நடைபெற உள்ளது. மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால், சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் மரங்களை நடவு செய்யும் போது, தூய்மையான காற்று உருவாகும் என்பதால் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதே போல கிடங்கில் உள்ள குப்பைகள் அனைத்தும் வேகமாக அப்புறப்படுத்தி, உரமாக பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...