உலக பூமி தினத்தை போற்றும் வகையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் தேவையான, ஆரோக்கியத்தை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்க கூடிய பழம் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.
கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு 2-ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உலக புவி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், கோவை சுந்தராபுரம் செம்மொழிப் பூங்கா மற்றும் அன்னூர் பேருந்து நிலையங்களில் இன்று காலை முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும் உலக பூமி தினத்தை போற்றும் வகையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் தேவையானதை, ஆரோக்கியத்தை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்கக்கூடிய பழம் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.

குறிப்பாகக் கொய்யா, மாதுளை, சீத்தா, சிறு நெல்லி, மர நெல்லி, எலுமிச்சை, மருதாணி, கறிவேப்பிலை, நாவல் மர கன்றுகள் என சுமார் 2000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

காலை முதல் பொது மக்களும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை வாங்கி வருகின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறும் போது:-
ஐ.நா அமைப்பின் அறிக்கைப் படி அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பெரிய இழப்புகளை நாம் சந்திக்க உள்ளோம் என அறிவித்துள்ளது.
மேலும் பருவநிலை மாற்றம் காரணமாகப் பனிக்கட்டி உருகுதல் கடல்மட்டம் உயர்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
இவற்றைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே நமது புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.