உலக பூமி தினம்: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!

உலக பூமி தினத்தை போற்றும் வகையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் தேவையான, ஆரோக்கியத்தை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்க கூடிய பழம் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.



கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு 2-ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உலக புவி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், கோவை சுந்தராபுரம் செம்மொழிப் பூங்கா மற்றும் அன்னூர் பேருந்து நிலையங்களில் இன்று காலை முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



மேலும் உலக பூமி தினத்தை போற்றும் வகையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் தேவையானதை, ஆரோக்கியத்தை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்கக்கூடிய பழம் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.



குறிப்பாகக் கொய்யா, மாதுளை, சீத்தா, சிறு நெல்லி, மர நெல்லி, எலுமிச்சை, மருதாணி, கறிவேப்பிலை, நாவல் மர கன்றுகள் என சுமார் 2000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 



காலை முதல் பொது மக்களும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை வாங்கி வருகின்றனர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறும் போது:-

ஐ.நா அமைப்பின் அறிக்கைப் படி அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பெரிய இழப்புகளை நாம் சந்திக்க உள்ளோம் என அறிவித்துள்ளது.

மேலும் பருவநிலை மாற்றம் காரணமாகப் பனிக்கட்டி உருகுதல் கடல்மட்டம் உயர்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

இவற்றைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே நமது புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...