தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் கொரோனா அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கணிசமாகப் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சென்னை ஐஐடி யில் 30 மாணவர்களுக்கு கொரோனாஉறுதியாகியுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும் போது:-
தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஏற்கனவே கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம், அது இன்னும் தமிழக அரசால் திரும்பப் பெறவில்லை.
அதேவேளையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே நேரடியாகச் சென்று பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது மெகா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் மைக்ரோ முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பதட்டமான சூழல் ஏதும் இல்லை, ஆனால் முதல் அலையின்போது குறைந்தபட்சம் பாதிப்பு 438, இரண்டாம் அலையில் 597, ஆனால் தற்போது மூன்றாம் அலையில் 18 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
அதன் காரணமாகத்தான் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறோம். மக்கள் முக கவசம் அணிந்து இடைவெளியை பின்பற்றினால் போதும் என தெரிவித்தார். அதேபோல் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
பெரும்பாலும் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியாத காரணத்தினால் தான் தற்போது அபராதம் விதிக்க அறிவுறுத்தி உள்ளோம். கடந்த இரண்டு வாரங்களாக மட்டுமே வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களை பிரித்து பார்க்காமல் கண்காணிப்பு பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் கொரோனா அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கணிசமாகப் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சென்னை ஐஐடி யில் 30 மாணவர்களுக்கு கொரோனாஉறுதியாகியுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும் போது:-
தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஏற்கனவே கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம், அது இன்னும் தமிழக அரசால் திரும்பப் பெறவில்லை.
அதேவேளையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே நேரடியாகச் சென்று பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது மெகா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் மைக்ரோ முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பதட்டமான சூழல் ஏதும் இல்லை, ஆனால் முதல் அலையின்போது குறைந்தபட்சம் பாதிப்பு 438, இரண்டாம் அலையில் 597, ஆனால் தற்போது மூன்றாம் அலையில் 18 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
அதன் காரணமாகத்தான் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறோம். மக்கள் முக கவசம் அணிந்து இடைவெளியை பின்பற்றினால் போதும் என தெரிவித்தார். அதேபோல் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
பெரும்பாலும் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியாத காரணத்தினால் தான் தற்போது அபராதம் விதிக்க அறிவுறுத்தி உள்ளோம். கடந்த இரண்டு வாரங்களாக மட்டுமே வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களை பிரித்து பார்க்காமல் கண்காணிப்பு பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.