நெஞ்சு வலிப்பதாக கூறிய அவரை, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை: கோவை வால்பாறை அருகே யானை விரட்டும் பணியின் போது கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை அடுத்த மாணாம்பள்ளி, மந்திரமட்டம் பகுதியில் தனியாகச் சுற்றிய பெண் யானையை, வழக்கமான ரோந்து பணியின் போது, வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது வேட்டை தடுப்பு காவலர் ரவிச்சந்திரன் (46) என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அவரை, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு, மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.
வால்பாறை அடுத்த மாணாம்பள்ளி, மந்திரமட்டம் பகுதியில் தனியாகச் சுற்றிய பெண் யானையை, வழக்கமான ரோந்து பணியின் போது, வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது வேட்டை தடுப்பு காவலர் ரவிச்சந்திரன் (46) என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அவரை, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு, மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.