கோவை மாநகராட்சி ஆணையருக்கு சமூகநீதி கட்சியின் தலைவர் கடிதம்..!

கோவை மாநகராட்சியில் வரிவசூலராக நியமிக்கப்பட்டுள்ளோர் குறித்து சமூகநீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார்.


கோவை: சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டியிருப்பதால், கோவை மாநகராட்சியில் வார்டுக்கு ஒருவர் வீதம், 100 வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளுக்கு தலா ஒரு வரிவசூல் அலுவலர் என 100 வரிவசூல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 54-நபர்கள் அ.தி.மு.க ஆட்சியில் இரவோடு இரவாக நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்கள் என திமுக ஆட்சி அமைத்த பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து 21-நபர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்று சமூகநீதி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் இரவோடு இரவாக நேர்காணல் வைத்து நியமிக்கப்பட்ட நிலையில் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் 21-நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கின்றது என்கிறனர் சமூகநீதி கட்சியினர்.

இது தொடர்பாக சமூகநீதி கட்சி தலைவர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது;

கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களில் 21 நபர்களுக்கு தற்பொழுது வரி வசூல் செய்யும் அலுவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.

எனவும், அவர்களுக்கு வழங்கிய பணி நியமனத்தை திரும்பத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தற்பொழுது இந்த செயல் நீதி மன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், விசாரணை முடியும் வரை இவர்களுகளை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...