இதனால், துர்நாற்றம் வீசி வருவதாகவும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேமாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வீடு மற்றும் நிலங்கள் தங்களுடைய பெயரில் மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வர்.
இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிவு நீர் குழாய் கசிந்து அலுவலக வளாகத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி பாசம் பிடித்து காட்சியளிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும் மழை பெய்யும் போது மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.