கோவையில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு: மக்கள், தொழில் துறையினர் அவதி!

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், கோவையில் சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 2010ல் தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை பிரச்சினை அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்தது. தற்பொழுது மீண்டும் கோவையில் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வது மக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று கோவை மதுக்கரை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல், காளப்பட்டி, குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் கணுவாய், தடாகம் பகுதிகளில் இரண்டு மணி நேரமும், சூலூர் சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல், கோவில்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டில் ஏற்பட்டது.

மேலும், இரவு நேரத்தில் கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளிலும், சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின்வெட்டால், மின்விசிறிகள் இயங்காததால், விட்டு வாசலில் மக்கள் அமர்ந்து இருந்ததை காணமுடிந்தது. மேலும், ஒரு சில இடங்களில், மின்வெட்டால் சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதே நிலை, தொடர்ந்தால் தொழில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என்கின்றனர் தொழில்துறையினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழ்வது மிகவும் சிரமமான காரியமாகும். கோவையில் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட துவங்கியுள்ளது. கடந்த காலங்களைப் போல மீண்டும் மின் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக அதிக நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் இறுதி தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வு நெருங்கி வரும் சூழலில் மின்தடை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேல் கோடை காலத்தில் மின்தடை அமல்படுத்தினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது: கடந்த 2010 ல் துவங்கி மூன்றாண்டுகள் தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை பிரச்சினை ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை மிகக் கடுமையாக பாதித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று பரவல் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தொழில் துறையினர் மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமல்படுத்த துவங்கினால், தொழில் வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்படும். குறு மற்றும் சிறு பிரிவுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசு தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொழில் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்சாரத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் பேரிலேயே, நாங்கள் மின்தடை செய்கிறோம். நள்ளிரவு 11 மணிக்கு மேல் மின்சார பயன்பாடு பரவலாக குறையத் துவங்கும். எனவே, அதற்குப் பின் இரவு தடையில்லாத மின்சாரம் வழங்க முடியும்.

இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...