கோவை - இலங்கை இடையே ஏப்ரலில் துவங்க இருந்த விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு.!

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக, கோவை - இலங்கை விமானப் போக்குவரத்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்படி, கோவை - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த விமான சேவை 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை இந்த மாதம் (ஏப்ரல்) மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: "இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இருந்தபோதும, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை - இலங்கை இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை ஏப்ரல் மாதத்தில் மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் விமான சேவை துவக்கப்படுமா..? அல்லது மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா..? என்பதை அன்றைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்", இவ்வாறு கோவை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்சமயம், கோவை- ஷார்ஜா மற்றும் கோவை - சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...