இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக, கோவை - இலங்கை விமானப் போக்குவரத்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, கோவை - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த விமான சேவை 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை இந்த மாதம் (ஏப்ரல்) மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: "இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இருந்தபோதும, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை - இலங்கை இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை ஏப்ரல் மாதத்தில் மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் விமான சேவை துவக்கப்படுமா..? அல்லது மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா..? என்பதை அன்றைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்", இவ்வாறு கோவை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்சமயம், கோவை- ஷார்ஜா மற்றும் கோவை - சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கோவை - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த விமான சேவை 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை இந்த மாதம் (ஏப்ரல்) மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: "இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இருந்தபோதும, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை - இலங்கை இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை ஏப்ரல் மாதத்தில் மீண்டும் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் விமான சேவை துவக்கப்படுமா..? அல்லது மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா..? என்பதை அன்றைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்", இவ்வாறு கோவை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்சமயம், கோவை- ஷார்ஜா மற்றும் கோவை - சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.