கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சங்கத்தின், தெற்கு வட்ட தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் MRB செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், WIPRO வசம் IFHRMS உள்ளிட்ட திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்திட வேண்டும், வரலாற்றுக் காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்", ஆகிய கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.
இச்சங்கத்தின், தெற்கு வட்ட தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் MRB செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், WIPRO வசம் IFHRMS உள்ளிட்ட திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்திட வேண்டும், வரலாற்றுக் காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்", ஆகிய கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.