கோவை திருச்சி சாலையில் குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 55 வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அப்பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகளை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக கூறும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து, மாநகராட்சியின் 61 வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி சாலை குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அப்பகுதியில் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டது. குளத்திற்கு செல்லும் கால்வாயில் குப்பைகள் நிரம்யுள்ளதை தொடர்ந்து அந்த குப்பைகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டதுடன், குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும், குளத்தின் நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநகராட்சியின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மீட்கப்படும் என்றும் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் உறுதிபட தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகளை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக கூறும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, மாநகராட்சியின் 61 வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி சாலை குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அப்பகுதியில் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டது. குளத்திற்கு செல்லும் கால்வாயில் குப்பைகள் நிரம்யுள்ளதை தொடர்ந்து அந்த குப்பைகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டதுடன், குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும், குளத்தின் நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநகராட்சியின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மீட்கப்படும் என்றும் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் உறுதிபட தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.