கோவையில் கோலாகலமாக நடந்த சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா!

கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 150, 200 அடி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா களைகட்டியது.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற விழாவில், பல்வேறு விதமான நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

இவ்விரு கோவில்களிலும், ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 21 நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சித்திரை விழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, சித்திரை திருவிழா உற்சாகத்துடன் கொண்டாபட்டு வருகிறது.

ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பூச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பக்தர்கள் சிலர் பெரிய கிரேன் மற்றும் வேன்களில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வந்தனர்.



குறிப்பாக, பக்தர்களில் ஒருவர் 150 அடி அலகும், மற்றொருவர் 200 அடி அலகும் குத்தி ஊர்வலமாக வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.



பின்னர், ஆற்றில் இருந்து கிளம்பிய சக்தி கரகம் உள்ளிட்ட 6 கிரகங்களும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தன. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...