கவர்னர் கார் மீது கருப்பு கொடி வீசிய விவகாரம்: காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்..!

கவர்னர் கார் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல் எனவும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: கவர்னர் பயணத்தின் போது, கருப்பு கொடிகள் வாகனம் மீது வீசப்பட்ட இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை, தர்மபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடிகளையும், கட்டைகளையும், வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில், தி.மு.க., கூட்டணி கட்சிகளான கம்யூ.,- வி.சி.க.,- ம.ம.க.,- எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்டோர் ஈடுபட்டனர். போலீஸ் கண் முன் இந்த செயல் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஆளும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் கவர்னர் மீது தரக்குறைவான விமர்சனம் மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கவர்னர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே அனைத்து விஷயங்களிலும் முடிவு செய்கிறார் என்பதை இந்த கும்பல் மறந்து விடுகிறது.

வாகனம் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல். கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...