கவர்னர் கார் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல் எனவும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை: கவர்னர் பயணத்தின் போது, கருப்பு கொடிகள் வாகனம் மீது வீசப்பட்ட இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை, தர்மபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடிகளையும், கட்டைகளையும், வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில், தி.மு.க., கூட்டணி கட்சிகளான கம்யூ.,- வி.சி.க.,- ம.ம.க.,- எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்டோர் ஈடுபட்டனர். போலீஸ் கண் முன் இந்த செயல் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஆளும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் கவர்னர் மீது தரக்குறைவான விமர்சனம் மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கவர்னர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே அனைத்து விஷயங்களிலும் முடிவு செய்கிறார் என்பதை இந்த கும்பல் மறந்து விடுகிறது.
வாகனம் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல். கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை, தர்மபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற போது, அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடிகளையும், கட்டைகளையும், வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில், தி.மு.க., கூட்டணி கட்சிகளான கம்யூ.,- வி.சி.க.,- ம.ம.க.,- எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்டோர் ஈடுபட்டனர். போலீஸ் கண் முன் இந்த செயல் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஆளும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் கவர்னர் மீது தரக்குறைவான விமர்சனம் மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கவர்னர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே அனைத்து விஷயங்களிலும் முடிவு செய்கிறார் என்பதை இந்த கும்பல் மறந்து விடுகிறது.
வாகனம் மீது தாக்குதல் நடத்துவது, அரசியல் மாண்பை குலைக்கும், அநாகரிகமான செயல். கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.