'பேரனிடமிருந்து பணத்தை மீட்டுத்தாங்க'... கோவையில் கண்ணீர் மல்க மனு கொடுத்த மூதாட்டி...!

கோவையில் பேரன் வங்கி கணக்கிற்கு ஓய்வூதிய பணத்தை அனுப்புவதாகவும், தனக்கு பேரன் பணம் கொடுக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக 80-வயது மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.



கோவை: ஓய்வூதிய பணத்தை பேரன் கொடுக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக 80 வயது மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.



கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சூரியநாராயணன் இவரது மனைவி ராஜம்மாள். சூரியநாராயணன் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாக தெரிகிறது. இதையடுத்து, தனியாக வசித்து வரும் ராஜம்மாள், சூரியநாராயணன் இறந்த பிறகு அவரது மகன் வழிப் பேரன் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி உள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக எந்த ஓய்வூதிய பணமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜம்மாள் வங்கிக்கு சென்று கேட்டபோது 4 மாதங்களாக அவர் பேரன் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த ராஜம்மாள் பலமுறை பேரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து புகார் அளிக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ராஜம்மாள் கண்ணீர் மல்க தனக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து விவரித்தார். பீளமேட்டில் தனியாக வசித்து வருவதாகவும், தனது பேரனை சிரமப்பட்டு படிக்க வைத்த நிலையில் இப்போது அவர் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். ஆனாலும் ஓய்வூதியத்தை வழங்காமல் அவரது வங்கி கணக்கை கொடுத்துள்ளதாகவும், இது குறித்து கேட்க வீட்டிற்குப் போனால் மருமகள் விரட்டியடி பதாகத் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக புகார் அளிக்க வர சுமார் 2000 ஆயிரம் வரை ஆட்டோ செலவு ஆவதோடு 80 வயதில் தினமும் தன்னால் அலைய முடியவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...