கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.
கோவை: சுற்றுலா விசாவில் கோவை வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த ஜார்ஜியா நாட்டு இளைஞரை போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18ம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முருகேஷ் தலைமையிலான அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஜார்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும், இல்லாமல் இருந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஜார்ஜியா நாட்டு இளைஞர் குறித்து விசாரித்த போது, ஈஷா மையத்திற்கு வந்த அவர் பின்னர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும், அவரது பெயர் முர்மேன் மும்லேட்ஸ் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜிய இளைஞர் முர்மேன் மும்லேட்ஸ் குறித்து வெளிநாடு பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18ம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முருகேஷ் தலைமையிலான அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஜார்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும், இல்லாமல் இருந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஜார்ஜியா நாட்டு இளைஞர் குறித்து விசாரித்த போது, ஈஷா மையத்திற்கு வந்த அவர் பின்னர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும், அவரது பெயர் முர்மேன் மும்லேட்ஸ் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜிய இளைஞர் முர்மேன் மும்லேட்ஸ் குறித்து வெளிநாடு பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.