கோவையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த ஜார்ஜியா நாட்டு இளைஞர் கைது - சென்னை புழல் சிறை அடைப்பு…!

கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.


கோவை: சுற்றுலா விசாவில் கோவை வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த ஜார்ஜியா நாட்டு இளைஞரை போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18ம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முருகேஷ் தலைமையிலான அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஜார்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும், இல்லாமல் இருந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஜார்ஜியா நாட்டு இளைஞர் குறித்து விசாரித்த போது, ஈஷா மையத்திற்கு வந்த அவர் பின்னர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும், அவரது பெயர் முர்மேன் மும்லேட்ஸ் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜிய இளைஞர் முர்மேன் மும்லேட்ஸ் குறித்து வெளிநாடு பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...