கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை…!

25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சுகாதார செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


சென்னை: இந்தியாவில் டெல்லி, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரங்களில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புள்ளர்களை கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...