25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சுகாதார செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை: இந்தியாவில் டெல்லி, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரங்களில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புள்ளர்களை கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரங்களில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புள்ளர்களை கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.