கொடநாடு கொலை கொள்ளை வழக்கு - வி.கே சசிகலாவிடம் நாளை தனிப்படை விசாரணை…!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், கொடநாடு எஸ்டேட் பங்குதாரரான வி.கே.சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளத் தனிப்படை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.


சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, வி.கே சசிகலாவிடம் நாளை தனிப்படை விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, சில பொருட்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ் சேலத்தில் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஐ.ஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைத்து மறு விசாரணை துவங்கி உள்ளது. ஏற்கனவே எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விசி ஆறுக்குட்டி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அனுபவ் ரவி உள்ளிட்ட 200 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், கொடநாடு எஸ்டேட் பங்குதாரரான வி.கே.சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளத் தனிப்படை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாளை காலை 10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள சசிகலா வீட்டில்வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், விகே சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...