கோவையில் பீஸ்ட் படத்தை பார்க்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கம் அழைத்துச்சென்று மகிழ்வித்துள்ளார்..!

படம் ஆரம்பித்து திரையில் விஜய்யை பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து சந்தோசமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.



கோவை: கோவையில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தை பார்க்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கம் அழைத்துச்சென்று மகிழ்வித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுள்ளது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பீஸ்ட் படம் பார்க்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த விஜய் ரசிகரும் தன்னார்வலருமான நவீன் ரோஷன் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லத்தில் வசித்து வரும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, தனது சொந்த செலவில் அழைத்து வந்து கோவை போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் பீஸ்ட் படம் பார்க்க வைத்தார்.



படம் ஆரம்பித்து திரையில் விஜய்யை பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து சந்தோசமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதுகுறித்து நவீன் ரேசன் கூறும் போது:-

கோவை போத்தனூர் அருகே உள்ள மாற்றுத்திறனாளி இல்லத்தில் இருக்கும், குழந்தைகளில் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் பீஸ்ட் படத்தை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டதால் அழைத்து வந்துள்ளேன்.

பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது 100-அடி உயரத்திற்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை,விட இம்மாதிரி வெளியே செல்ல வாய்ப்பு இல்லாமல், திரையரங்கில் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளைப் படத்திற்கு அழைத்து வருவதை நடிகர் விஜய் விரும்புவார்.

இதேபோல் மீண்டும் அடுத்தப்படத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...