கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியில் டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறி, பக்கத்து வீட்டுக்காரர் மீது ஆசிட் வீசிய வீரமணி என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டிவியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். பின்னர், இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து முதியவர் முகத்தில் வீசியுள்ளார். ஆசிட் முகத்தில் பட்டதையடுத்து, முதியவர் அலறி துடித்துள்ளார். ஆசிட் வீச்சில், அவரது முகம், வாய் மற்றும் கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, சம்பத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டிவியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். பின்னர், இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து முதியவர் முகத்தில் வீசியுள்ளார். ஆசிட் முகத்தில் பட்டதையடுத்து, முதியவர் அலறி துடித்துள்ளார். ஆசிட் வீச்சில், அவரது முகம், வாய் மற்றும் கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, சம்பத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.