தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகத்திற்கு மாநில அரசின் விருது மற்றும் ஊக்கத்தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!

தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ் செய்தி ஊடகங்களில் தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகத்துக்கு மாநில அளவிலான சிறந்த தமிழ் உச்சரிப்பில் விருது மற்றும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.


கோவை: தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 3,000 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் மொழி.

அகழ்வாய்வு அடிப்படையில் அசோகர் காலத்திற்கு முன்பிருந்து எழுத்துக்களுடன் கூடிய மொழி தமிழ்மொழி. தனித்து இயங்கும் சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் மொழி என குறிப்பிட்டார். அதன் பின்னர், தமிழ் வளர்ச்சி துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாணவர்களிடையே தமிழ் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழ் மன்றம் அமைத்து தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்த ரூ.5.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள 6,218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி நடத்த ரூ.5.6 கோடி வழங்கப்படும் என்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிக்காக ரூ.2 கோடி, திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற திருக்குறள் மாநாடு நடத்த ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல, தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ் செய்தி ஊடகங்களில் தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகத்துக்கு மாநில அளவிலான சிறந்த தமிழ் உச்சரிப்பில் விருது வழங்கப்படும் என்றும் அதனுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும், என்று அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...