கோவை மதுக்கரை அருகே தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ.8.40 கோடி நிலத்தை அதிரடியாக மீட்ட அதிகாரிகள்..!

கட்டிடத்தை பறிமுதல் செய்து அரசு கணக்கில் சேர்த்ததோடு, இந்த இடத்தில் மகளிர் சுய உதவி குழு பங்களிப்போடு துரித உணவுகள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை சீரபாளையம் ஊராட்சியில் தனியார் கல்லூரியிடமிருந்த ரூ.8.40-கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.



கோவை மாவட்டத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களைக் கண்டறிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சனாரி நெடுஞ்சாலை பகுதியில் சோதனை செய்த போது, மதுக்கரை ஒன்றிய சீரபாளையம் ஊராட்சியில் சுமார் 42-சென்ட் நிலம், அபிராமி நர்சிங் கல்லூரி வசம் இருந்தது தெரியவந்தது.



ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை காலி செய்யக்கோரி பலமுறை அறிவுறுத்தியும், கல்லூரி நிர்வாகம் உடன்படாததால், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தலைமையில் ஊராட்சி தலைவர், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பிலிருந்த 42-சென்ட் இடத்தை மீட்டனர். சுமார், ரூ.8.40 கோடி மதிப்புள்ள அரசு இடம் மற்றும் கட்டிடம் மீட்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்லூரி வளாகத்தில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் பறிமுதல் செய்து அரசு கணக்கில் சேர்த்ததோடு, அந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழு பங்களிப்போடு துரித உணவுகள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள தனியார் கல்லூரிகள் விடுதிகள், தொழிற்சாலைகள் அதிக அளவு ஊராட்சிக்கு வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அடுத்த நடவடிக்கையாக, தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள், மருத்துவமனைகள் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி ஆகியவற்றை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையினால் 8 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் மீட்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...