கோவையில் ட்ரோன் யூனிட் - மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என மாநகர போலீஸ் எதிர்பார்ப்பு….!

ஏற்கனவே மும்பை, டெல்லி, மாநிலங்களில் ட்ரோன் கண்காணிப்பு அமல்படுத்தி உள்ளது. விரைவில் சென்னை மற்றும் கோவைக்கு இந்த டிரோன் யூனிட்டுகள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்துள்ளனர்.


கோவை: சென்னை பெருநகர போலீஸில் யூனிட்டுகள் பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு அதற்காக 3.6 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, முக்கிய கடை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த சென்னை பெருநகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கோரிக்கை வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். சென்னையில் முக்கியமான 9 இடங்களில் இந்த ட்ரோன் கேமரா கண்காணிப்பை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

இதன்மூலம் முக்கியமான அரசியல் கூட்டங்கள், பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிக்கவும் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாநகரில் ட்ரோன் யூனிட்டை பயன்படுத்த மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

வரும் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற உள்ள மானிய கோரிக்கையின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக முக்கியமான நிகழ்வுகளை கண்காணிக்க ட்ரோன் கேமரா பயன்படும் என்றும் நேரடியாக காவலர்கள் கண்காணிப்பதைக் காட்டிலும் மிக எளிதாகவும், ட்ரோன் மூலம் கண்காணிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே மும்பை, டெல்லி, மாநிலங்களில் ட்ரோன் கண்காணிப்பு அமல்படுத்தி உள்ளதால் விரைவில் சென்னை மற்றும் கோவைக்கு இந்த ட்ரோன் யூனிட்டுகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...