கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, 5-கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை பாஜகவினர் நடத்தினர்.
கோவை: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து எடுத்துரைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை பாஜகவினர் நடத்தினர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி முல்லை நகரில் உள்ள அங்கன்வாடியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து (குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு திட்டம்) விளக்கமளிக்கப்பட்டது.
பாஜக இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி, மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு அத்திட்டம் குறித்தும் பிரதமரின் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணி பெண்களிடம் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் 5 கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தனது சொந்த செலவில் கட்டிய இரண்டு கழிவறைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
நிகழ்விற்கு முன்னதாக பிரீத்தி லட்சுமி முருகானந்தம் ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.