கோவையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து சாமியானா மேற்கூரையில் தீ பிடித்ததால் பரபரப்பு..!

தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து சாமியானா மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டார். அங்கிருந்த மூன்று தூய்மை பணியாளர்களுக்கு முருகானந்தம் பாத பூஜைகள் செய்தார்.

இதையடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பாத பூஜை நிகழ்வு முடிந்த பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா டென்ட் அடியே நின்று தூய்மை பணியாளர்கள் மத்தியில் முருகானந்தம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை வரவேற்க வைத்த பட்டாசு சரம் வெடித்து சிதறியதால் சாமியானா டென்ட் மேற்கூரையில் விழுந்து ஒரு பகுதியில் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...