தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து சாமியானா மேற்கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டார். அங்கிருந்த மூன்று தூய்மை பணியாளர்களுக்கு முருகானந்தம் பாத பூஜைகள் செய்தார்.
இதையடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பாத பூஜை நிகழ்வு முடிந்த பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா டென்ட் அடியே நின்று தூய்மை பணியாளர்கள் மத்தியில் முருகானந்தம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை வரவேற்க வைத்த பட்டாசு சரம் வெடித்து சிதறியதால் சாமியானா டென்ட் மேற்கூரையில் விழுந்து ஒரு பகுதியில் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டார். அங்கிருந்த மூன்று தூய்மை பணியாளர்களுக்கு முருகானந்தம் பாத பூஜைகள் செய்தார்.
இதையடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது பாத பூஜை நிகழ்வு முடிந்த பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா டென்ட் அடியே நின்று தூய்மை பணியாளர்கள் மத்தியில் முருகானந்தம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை வரவேற்க வைத்த பட்டாசு சரம் வெடித்து சிதறியதால் சாமியானா டென்ட் மேற்கூரையில் விழுந்து ஒரு பகுதியில் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட பாஜகவினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.