'Nurture Nature Camp-2022': சிறுதுளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இணைந்து நடத்திய 14-வது இயற்கை வளர்ப்பு முகாம்..!

கோவையில் இயற்கையின் வளர்ப்பையும், சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும், உணர்த்தும் வகையில் இன்று மேற்கு வட்டத்தைச் சேர்ந்த சிறுதுளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இணைந்து நடத்திய 14-வது இயற்கை வளர்ப்பு முகாம் நடைபெற்றது.


கோவை: ‘நுர்ட்சர் நேட்சர்’Nurture Nature Camp என்ற முகாம் இயற்கையின் வளர்ப்பையும் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இன்று கோவை மேற்கு வட்டத்தைச் சேர்ந்த சிறுதுளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இணைந்து முகாமினை இன்று நடத்தினர்.



இந்த முகாமானது இன்றிலிருந்து சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது இதற்கான துவக்க விழா இன்று கோவை வி.ஓ.சி பூங்காவில் அமையப்பெற்றுள்ள பச்சை நாயகி என அழைக்கப்படும் அப்துல் கலாம் அவர்களால் நடவு செய்யப்பட்ட மரத்தின் அருகில் நடைபெற்றது.

இந்த முகாமில் சுமார் 70 மாணவர்கள் 13 பள்ளிகளிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர். முதல் நாளான இன்று நடைபெற்ற இந்த முகாமில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-

இந்த முகாமில் மாணவர்கள் அனைவரும்நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அனைத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி வழங்கப்படும். மேலும், இயற்கை குறித்த விழிப்புணர்வு மற்றும் இயற்கை வளர்ச்சி குறித்து கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இறுதி நாளான சனிக்கிழமை அன்று பயிற்சியின் முடிவில் மாணவர்களின் புரிதலைச் சோதனை செய்யும் வகையில் வினாடி வினா நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு தொடக்க உரையினை கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

இதில் அவர் கூறியதாவது:-

பூங்காவிற்கு வந்ததிலிருந்து எவ்வாறான விஷயங்களை நீங்கள் கவனித்தீர்கள்என்று சோதனை செய்யலாம், இதனையெல்லாம் கவனித்தீர்கள் ? என்றும், இந்த முகாமினை பயனுற அமைத்துக் கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...