கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 குழந்தைகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்துள்ளன.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப அலுவலர்களுக்கு மனித உயிரை காக்கும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 108 ஆம்புலன்சில் இருபத்தொரு பிரசவங்கள் நடந்துள்ளன. பல்வேறு இடங்களில் சாலை வேலை நடப்பதால் ஆம்புலன்சில் வேகம் குறைகிறது. இதனால், ஏற்படும் தாமதம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரசவங்கள் நடக்கின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தாய் - சேய் இருவருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நடந்துள்ளது, என்றார்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப அலுவலர்களுக்கு மனித உயிரை காக்கும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 108 ஆம்புலன்சில் இருபத்தொரு பிரசவங்கள் நடந்துள்ளன. பல்வேறு இடங்களில் சாலை வேலை நடப்பதால் ஆம்புலன்சில் வேகம் குறைகிறது. இதனால், ஏற்படும் தாமதம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரசவங்கள் நடக்கின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தாய் - சேய் இருவருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நடந்துள்ளது, என்றார்.