சிறுசேமிப்பு முக்கியத்துவம் குறித்தும், திருநங்கைகள் மீதான சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவித்தனர்.
கோவை: சிறுசேமிப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருநங்கைகள் உண்டியல் வழங்கினர்.
கோவையை சேர்ந்த 'ட்ரான்ஸ்மாம்' என்ற திருநங்கைகள் நல அறக்கட்டளை அமைப்பு சார்பாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் திருநங்கை அனுசியா முன்னிலை வகித்தார்.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறு சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பண சேமிப்பு பெட்டகம் (உண்டியல்) வழங்கப்பட்டது.

உண்டியலை தரும்போது, அதில் 1-ரூபாய், 5- ரூபாய் வரை காசுகள் போட்டு தரப்பட்டது.

அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

முன்னதாக TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பேசும்போது, சிறுவயதிலிருந்தே சிறுசேமிப்பு மிகவும் முக்கியம் என்பதால் உண்டியலைப் பள்ளி மாணவர்களுக்குத் தந்துள்ளோம்.
இதுதவிர திருநங்கைகள் மீது சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்களான திருநங்கைகள் மதுரா, ஸ்ரீமதி, கார்த்திகா, ஷாரிகா, ரக்ஷனா, மெல்லினா, பிரவீனா, கார்த்திக், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவையை சேர்ந்த 'ட்ரான்ஸ்மாம்' என்ற திருநங்கைகள் நல அறக்கட்டளை அமைப்பு சார்பாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் திருநங்கை அனுசியா முன்னிலை வகித்தார்.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறு சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பண சேமிப்பு பெட்டகம் (உண்டியல்) வழங்கப்பட்டது.
உண்டியலை தரும்போது, அதில் 1-ரூபாய், 5- ரூபாய் வரை காசுகள் போட்டு தரப்பட்டது.
அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
முன்னதாக TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பேசும்போது, சிறுவயதிலிருந்தே சிறுசேமிப்பு மிகவும் முக்கியம் என்பதால் உண்டியலைப் பள்ளி மாணவர்களுக்குத் தந்துள்ளோம்.
இதுதவிர திருநங்கைகள் மீது சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்களான திருநங்கைகள் மதுரா, ஸ்ரீமதி, கார்த்திகா, ஷாரிகா, ரக்ஷனா, மெல்லினா, பிரவீனா, கார்த்திக், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.