கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கிய 'TransMom' என்ற திருநங்கைகள் அறக்கட்டளை..!

சிறுசேமிப்பு முக்கியத்துவம் குறித்தும், திருநங்கைகள் மீதான சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவித்தனர்.


கோவை: சிறுசேமிப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருநங்கைகள் உண்டியல் வழங்கினர்.

கோவையை சேர்ந்த 'ட்ரான்ஸ்மாம்' என்ற திருநங்கைகள் நல அறக்கட்டளை அமைப்பு சார்பாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் திருநங்கை அனுசியா முன்னிலை வகித்தார்.



இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறு சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பண சேமிப்பு பெட்டகம் (உண்டியல்) வழங்கப்பட்டது.



உண்டியலை தரும்போது, அதில் 1-ரூபாய், 5- ரூபாய் வரை காசுகள் போட்டு தரப்பட்டது.



அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.



முன்னதாக TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பேசும்போது, சிறுவயதிலிருந்தே சிறுசேமிப்பு மிகவும் முக்கியம் என்பதால் உண்டியலைப் பள்ளி மாணவர்களுக்குத் தந்துள்ளோம்.

இதுதவிர திருநங்கைகள் மீது சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் TransMom அறக்கட்டளையின் உறுப்பினர்களான திருநங்கைகள் மதுரா, ஸ்ரீமதி, கார்த்திகா, ஷாரிகா, ரக்ஷனா, மெல்லினா, பிரவீனா, கார்த்திக், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...