மாடு அறுவைமனைகளில் 'கட்டணக்கொள்ளை'.. இறைச்சி விற்பனையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

மனு அளிக்க வந்த விற்பனையாளர்கள் இரண்டு காளை கன்றுகளை அழைத்து வந்து, அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளை தொங்க விட்டபடி மனு அளிக்க வந்தனர்.



கோவை: மாடு அறுவைமனைகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கன்றுகுட்டியுடன் இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவை சத்தி சாலை மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் மாடு அறுவைமனைகள் செயல்பட்டு வருகின்றது.



இதில் காளை மாடு மற்றும் கன்றுகளை வெட்ட இறைச்சி விற்பனையாளர்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்நிலையில் இந்த அறுவைமனைகளை ஏலம் எடுத்துள்ள அஸ்லம் அலி மற்றும் இப்ரஹீம் பாதுஷா ஆகிய இருவரும், மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், கன்றுகுட்டிகளுக்கு 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும், இதற்கு உரிய ரசீதுகளும் தருவதில்லை எனவும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



மனு அளிக்க வந்த விற்பனையாளர்கள் இரண்டு காளை கன்றுகளையும் அழைத்து வந்தனர்.



அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டபடி மனு அளிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் புகார் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...