கோவையில் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு கூட்டம்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது. அப்போது, போது விநியோக துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பல்வேறு துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் பொது விநியோக துறை ஒரு துறையின் கீழ் செயல்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை அமல்படுத்தி, ஒரு துறை என்பதற்கு பதிலாகதனித்துறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு அறிவித்தால் இந்தியாவிலேயே இந்த திட்டம் சிறப்பு மிக்க திட்டமாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், பி.ஓ.எஸ். என்று சொல்லக்கூடிய விற்பனை முனையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், மோடம் வழங்கப்பட்டு இணைய சேவை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக ரேசனுக்கு தனி துறை, அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 17 சதவீதவ அகவிலைப்படியை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், ரேசனுக்கு வழங்கப்படும் பொருட்களை சரியான அளவில், சரியான எடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தபணியாளர்கள் பலர்கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...