கோவை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி உலக ஓவிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஓவியப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஓவிய பயிற்சி முகாம் இன்று கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடத்தப்படும் என்ற அறிவிப்பை,கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 முதல் 16 வயது உள்ள சிறுவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் சிறந்த ஓவியர்கள் கலந்துகொண்டு ஓவியம் முறைகள் குறித்து செயல்முறை விளக்கங்களையும், பயிற்சிகளையும் அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கோவை ஜவஹர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலரை 9942147516 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவிய பயிற்சி முகாம் இன்று கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடத்தப்படும் என்ற அறிவிப்பை,கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 முதல் 16 வயது உள்ள சிறுவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் சிறந்த ஓவியர்கள் கலந்துகொண்டு ஓவியம் முறைகள் குறித்து செயல்முறை விளக்கங்களையும், பயிற்சிகளையும் அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கோவை ஜவஹர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலரை 9942147516 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.