உலக ஓவிய தினத்தை முன்னிட்டு, கோவையில் சிறார்களுக்கு ஓவிய பயிற்சி முகாம்!

கோவை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற்றது.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி உலக ஓவிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஓவியப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த ஓவிய பயிற்சி முகாம் இன்று கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடத்தப்படும் என்ற அறிவிப்பை,கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 முதல் 16 வயது உள்ள சிறுவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சிறந்த ஓவியர்கள் கலந்துகொண்டு ஓவியம் முறைகள் குறித்து செயல்முறை விளக்கங்களையும், பயிற்சிகளையும் அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கோவை ஜவஹர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலரை 9942147516 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...