மூணாறு அருகே, உடுமலைப்பேட்டை ரோட்டில், காட்டு யானை நின்றதால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்:கேரளா மாநிலம் மூணாறு அருகே உடுமலைப்பேட்டை ரோட்டில், கடந்த ஒரு வாரமாக, காட்டு யானை இரவில் வலம் வந்தபடி இருந்தது.
இந்த யானை, நேற்று மாலை, கன்னிமலை எஸ்டேட் அருகே ரோட்டோரம் நின்றது. இதனால், ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல், ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.
யானையை காண, சுற்றுலா பயணியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறிது நேரத்திற்குப் பின், சில வாகனங்கள் யானையை கடந்து சென்றன. அவற்றை, யானை பின் தொடர்ந்து விரட்டியது. இருசக்கர வாகனத்தில் வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், கீழே விழுந்து காயமடைந்தார்.
சிலர் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று, 'செல்ஃபி' எடுத்தனர். நீண்ட நேரத்திற்குப் பின், யானை காட்டுக்குள் சென்றதும், வாகன போக்குவரத்து சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த யானை, நேற்று மாலை, கன்னிமலை எஸ்டேட் அருகே ரோட்டோரம் நின்றது. இதனால், ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல், ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.
யானையை காண, சுற்றுலா பயணியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறிது நேரத்திற்குப் பின், சில வாகனங்கள் யானையை கடந்து சென்றன. அவற்றை, யானை பின் தொடர்ந்து விரட்டியது. இருசக்கர வாகனத்தில் வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், கீழே விழுந்து காயமடைந்தார்.
சிலர் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று, 'செல்ஃபி' எடுத்தனர். நீண்ட நேரத்திற்குப் பின், யானை காட்டுக்குள் சென்றதும், வாகன போக்குவரத்து சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.