கோவை வனசரகம், ஜம்புகண்டி என்ற இடத்தில் இறந்த புள்ளிமானை 6 கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்களுக்கு மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
கோவை: கோவையில் உயிரிழந்த புள்ளிமானை ஆறு கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபிநாரி பிரிவு ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் உள்ள பட்டா நிலத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஆண் புள்ளிமானை நாய் துறத்தியதில், அங்கிருந்த முள் கம்பி வேலியில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. பின்னர், அந்த மானை நாய் கடித்து கொன்றதாக தெரிகிறது.
அப்போது, அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆனைக்கட்டியை சேர்ந்த முருகன் (48), சிவகாமி (38), சாந்தி (37), வள்ளி (29), சிந்து (28), சிவகாமி (48) ஆகிய 6 பேரும் நாயை துரத்தி விட்டு, புள்ளிமானை இழுத்து மறைவான இடத்தில் வைத்து ஆறு கூறுகளாக பிரித்துள்ளனர்.
இதனிடையே, மான் இறந்த தகவல் அறிந்து அங்கு வந்த கோபிநாரி பிரிவு வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் குமார், அண்ணாமலை, வனக்காவலர் முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், அப்பகுதியில் மான் இறைச்சியை கூறு போட்ட 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, அந்த மான் இறைச்சி மற்றும் தலை ஆகியவை வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் ஆறு பேர் மீது தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபிநாரி பிரிவு ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் உள்ள பட்டா நிலத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஆண் புள்ளிமானை நாய் துறத்தியதில், அங்கிருந்த முள் கம்பி வேலியில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. பின்னர், அந்த மானை நாய் கடித்து கொன்றதாக தெரிகிறது.
அப்போது, அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆனைக்கட்டியை சேர்ந்த முருகன் (48), சிவகாமி (38), சாந்தி (37), வள்ளி (29), சிந்து (28), சிவகாமி (48) ஆகிய 6 பேரும் நாயை துரத்தி விட்டு, புள்ளிமானை இழுத்து மறைவான இடத்தில் வைத்து ஆறு கூறுகளாக பிரித்துள்ளனர்.
இதனிடையே, மான் இறந்த தகவல் அறிந்து அங்கு வந்த கோபிநாரி பிரிவு வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் குமார், அண்ணாமலை, வனக்காவலர் முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், அப்பகுதியில் மான் இறைச்சியை கூறு போட்ட 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, அந்த மான் இறைச்சி மற்றும் தலை ஆகியவை வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் ஆறு பேர் மீது தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.