கோவையில் உயிரிழந்த புள்ளிமானை கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை!

கோவை வனசரகம், ஜம்புகண்டி என்ற இடத்தில் இறந்த புள்ளிமானை 6 கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்களுக்கு மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் உயிரிழந்த புள்ளிமானை ஆறு கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபிநாரி பிரிவு ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் உள்ள பட்டா நிலத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஆண் புள்ளிமானை நாய் துறத்தியதில், அங்கிருந்த முள் கம்பி வேலியில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. பின்னர், அந்த மானை நாய் கடித்து கொன்றதாக தெரிகிறது.

அப்போது, அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆனைக்கட்டியை சேர்ந்த முருகன் (48), சிவகாமி (38), சாந்தி (37), வள்ளி (29), சிந்து (28), சிவகாமி (48) ஆகிய 6 பேரும் நாயை துரத்தி விட்டு, புள்ளிமானை இழுத்து மறைவான இடத்தில் வைத்து ஆறு கூறுகளாக பிரித்துள்ளனர்.

இதனிடையே, மான் இறந்த தகவல் அறிந்து அங்கு வந்த கோபிநாரி பிரிவு வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் குமார், அண்ணாமலை, வனக்காவலர் முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், அப்பகுதியில் மான் இறைச்சியை கூறு போட்ட 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து, அந்த மான் இறைச்சி மற்றும் தலை ஆகியவை வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் ஆறு பேர் மீது தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...